Friday, March 26, 2010

சக்கரை வியாதி (டயாபட்டீஸ்) >>சர்க்கரை நோய் வரக் காரணங்கள்

சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:

1. பரம்பரை ஒரு காரணமாகலாம்
2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
3. நகர்புற வாழ்வியல் சூழல்
4. முறையற்ற உணவு பழக்கம்
5. மது, புகை, போதை பொருட்களால்
6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
7. இன்னும் பிற

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
4. சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
5. அடிக்கடி தாகம், அதிக பசி
6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
7. தூக்கமின்மை
8. காயம்பட்டால் ஆறாதிருத்தல்

சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:

1. அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.

சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:

1. வாழைப்பூ
2. வாழைப்பிஞ்சு
3. வாழைத்தண்டு
4. சாம்பல் பூசணி
5. முட்டைக்கோஸ்
6. காலிஃபிளவர்
7. கத்தரிப்பிஞ்சு
8. வெண்டைக்காய்
9. முருங்கைக்காய்
10. புடலங்காய்
11. பாகற்காய்
12. சுண்டைக்காய்
13. கோவைக்காய்
14. பீர்க்கம்பிஞ்சு
15. அவரைப்பஞ்சு

சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:

1. முருங்கை கீரை
2. அகத்திக் கீரை
3. பொன்னாங்கண்ணிக் கீரை
4. சிறுகீரை
5. அரைக்கீரை
6. வல்லாரை கீரை
7. தூதுவளை கீரை
8. முசுமுசுக்கைகீரை
9. துத்தி கீரை
10. மணத்தக்காளி கீரை
11. வெந்தயக் கீரை
12. கொத்தமல்லி கீரை
13. கறிவேப்பிலை
14. சிறு குறிஞ்சான் கீரை
15. புதினா கீரை

சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:

1. விளாம்பழம் -50கிராம்
2. அத்திப்பழம்
3. பேரீத்தம்பழம்-3
4. நெல்லிக்காய்
5. நாவல்பழம்
6. மலைவாழை
7. அன்னாசி-40கிராம்
8. மாதுளை-90கிராம்
9. எலுமிச்சை 1/2
10. ஆப்பிள் 75கிராம்
11. பப்பாளி-75கிராம்
12. கொய்யா-75கிராம்
13. திராட்சை-100கிராம்
14. இலந்தைபழம்-50கிராம்
15. சீத்தாப்பழம்-50கிராம்

சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:

1. எலுமிச்சை சாறு -100மி.லி
2. இளநீர் -100மி.லி
3. வாழைத்தண்டு சாறு -200மி.லி
4. அருகம்புல் சாறு -100மி.லி
5. நெல்லிக்காய் சாறு -100மி.லி
6. கொத்தமல்லி சாறு -100மி.லி
7. கறிவேப்பிலைச் சாறு -100மி.லி

தவிர்க்க வேண்டியவைகள்:

1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.

************ ********* ********* ********* ***



க‌றிவே‌ப்‌பிலை சா‌ப்‌பிடுவதா‌ல் >> ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.


நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம்



நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.

இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம்

நோய்கள் பற்றி விழிப்புணர்வு: சக்கரை வியாதி (டயாபட்டீஸ்)



பிஸ்மில்லாஹ்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கிய, உபயோகமுள்ள ஆலோசனைகள். தந்தமைக்கு சகோதரருக்கு மிக்க நன்றி. நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது இதை படிப்பவர்கள் தனது உறவினர்களில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இவற்றை தெரிவித்து உதவலாம்.



இதில் குறிப்பிட்டுள்ள படி, இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று இருந்துவிடாமல் சிறு நீரகங்கள் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளையும் அவ்வப்போது எடுத்து பார்ப்பது சிறந்தது. உலகில் 10 நொடிகளில் ஒருவர் சர்க்கரை நோயால் இறப்பதாக ஒரு சர்வதேச அறிக்கை தெரிவிக்கிறது. இறைவன் நம் அனைவருக்கும் நோயற்ற வாழ்வை தர துஆச்செய்வோமாக.




Subject: நோய்கள் பற்றி விழிப்புணர்வு: சக்கரை வியாதியின் (டயாபட்டீஸ்) கோளா

2. சக்கரை வியாதி கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். மாத்திரையால் சக்கரை வியாதி குறையவில்லையெனில் இன்சுலினுக்கு மாறிவிடுவது சிறந்தது. இன்சுலினுக்கு மாறுவது அவசியமா என்பதை உங்கள் டாக்டரிடம் அவசியம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.



3. சக்கரை வியாதிக்கு தொடர்ந்து மருத்துவம் செய்வது மிக அவசியம்.



4. கொழுப்புச்சத்து, சிறுநீரகம், கண் மற்றும் கால்களை குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம்.



5. சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. Now-a-days these machines are easily and cheaply available. Easy to use as well.



A. சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்; ஆனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழப்பது தெரியாமல் போய்விட கூடும் என்பதால், செலவை பாராமல் தொடர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.



B.சக்கரை வியாதி நரம்புகளை மறக்க செய்வதால், புண் ஏதும் ஏற்பட்டால் இலகுவாக ஆறாது. நிறைய பேருக்கு கால்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் கால் பரிசோதனை செய்ய வேண்டும்.



C.ஆரம்பத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது கண்ணில் கோளாறு வராமல் தடுக்க ஏதுவாக இருக்கும்.



D.சக்கரை வியாதியோடு, கொழுப்பு சத்தும், இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்குமேயானால் மிகவும் ஆபத்து. பக்க வாதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால், தொடர் சிகிச்சை செய்வது அவசியம்.



குடும்பத்தில் (தாய், தந்தை) சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகம் இந்த நோய் வரக் கூடும் என்பதால் அளவாக உணவையும் அதிகமாக உடற்பயிற்சியும் செய்து கொண்டால் வியாதி வருவது தள்ளி போக கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அல்லாஹ் நன்கு அறிந்தவன்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. புகாரி 5678

0 comments:

About This Blog

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP