Monday, February 22, 2010

தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


முத்தப்பேட்டையில் உள்ள முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதோடு அவர்களின் சொத்துக்களையும் சூறையாடுவதும் சங்கபரிவார பயங்கரவாதிகளால் தொடர்கதையாகி விட்டது.அதிலும் சமீப காலமாக சங் கும்பலின் சதிச்செயல் உச்சக்கட்டத்திற்கு சென்று அப்பாவி முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதும்,முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு (தாக்குதல்) தீ வைப்பதும் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில் பாதிக்கப்படுகின்ற முஸ்லிம்கள் ஜனநாயக வழியில் வீதிக்கு வந்தாலும் அல்லது தாக்குதல் நடத்த வரும் பாசிச பயங்கரவாதிகளை தடுக்க நினைத்தாலும் அவர்கள் மீது சில காவல்துறை கருப்பாடுகள் பொய்வழக்கு பதிவு செய்வதும் அல்லது ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபடுவதும் அல்லது பள்ளியில் பயிலும் மாணவர்களையும்,வீதியில் வரும் பெரியவர்களையும் தாக்குவதும் அல்லது கைது செய்து பொய்வழக்கு போடுவதும் காவல்துறையின் பயங்கரவாதமாக ஒருபுறம் அரங்கேற்றப்படுகிறது.

இப்படி சங்கும்பலாலும்,காவல்துறையாலும் அல்லோலப்படும் பாதிக்கப்படும் முஸ்லிம்கள் உரிமைகளை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஓட்டுகளை பெற்று ஆட்சி கட்டளில் அமர்ந்திருக்கும் திமுக தனது அரசுசார்பாக ஓரு குழு நியமித்து அந்த குழுவை முத்தப்பேட்டைக்கு நேரடியாக அனுப்பிவைத்து நிலைமையை சரியாக ஆய்வு செய்து அவர்களால் ஓரு அரிக்கையை பெற்று திமுக அரசு சரியான தக்க நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும்.

திமுக அரசே சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுங்கள்.கடந்த உங்களது ஆட்சியில் தான் கோவையில் மிகப்பெரும் மதக்கலவரமும் அதனை தொடர்ந்து நடைபெற்ற பொருள்சேதமும் உயிர்சேதமும் அரங்கேற்றப்பட்டன. அதனை தடுக்க வேண்டிய இடத்தில் இருந்த நீங்கள் (திமுக) சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் முதல்வரான உங்கள் மீதும் திமுக மீதும் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு அதிருப்பத்தி இன்றும் உண்டு.கடந்த காலங்களில் (மறைமுகமாக சங்கும்பலுக்கு துணையாக இருந்து விட்டீர்கள்) செய்த அதே தவறை இன்னொருமுறை முத்துப்பேட்டை விஷயத்தில் செய்து விடாதீர்கள். இனிமேலும் நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டால் இனிவரும் தேர்தலிகளில் திமுகவிற்கு முஸ்லிம் சமுதாயம் சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் என்பதை பதிவு செய்கிறோம்.

ஆகவே திமுக அரசே உடனடியாக போர்கால அடிப்படையில் முத்தப்பேட்டையில் அமைதியை நிலைநாட்ட அராஜகத்தில் ஈடுபடும் பாசிச பயங்கரவாதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம்.

இதன் பிறகும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிகார வர்க்கங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் தேர்தல்களை முத்துப்பேட்டை முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து புறக்கணிக்க வேண்டியநிலை வரும் என்பதை மட்டும் தெளிவாக பதிவுசெய்கிறோம்.

ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களை பாதுகாக்குமா?

0 comments:

About This Blog

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP